புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவர்கள் சீனடிக் கலை போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை பெற்று சாதனை
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் உயர்தர மாணவர்கள் தேசிய மட்ட இஸ்லாமிய கலாசார போட்டி நிகழ்ச்சியின் சீனடிக் கலை போட்டியில் முதலாம் இடத்தை பிடித்து தேசிய மட்டத்தில் சாதனை படைத்து பாடசாலைக்கும் புத்தளம் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளதாக கல்லூரியின் அதிபர் ஐ.ஏ நஜீம் தெரிவித்துள்ளார்.
சீனடிக் கலையின் தேசிய மட்ட போட்டிகள் கடந்த சனிக்கிழமை (01) கொழும்பு சாஹிரா தேசிய கல்லூரியில் இடம்பெற்றது.
சீனடிக் கலையில் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை சார்பில் உயர்தர மாணவர் குழுவினர் களான ஜே.சாஜித் (தலைவர்) எம்.ஏ.எம் ஆதில், எம்.கே கைஸ், எம்.எச் ஹைதம் காசிம், எம் ஏ எம் அஸ்மத். எஸ்.எம் அர்ஷத், எம் எம் எம் முன்தீர், எம் ஆர் எம் றஹீக் ஆகிய மாணவர்கள் தமது சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தி வெற்றிபெற்றுள்ளனர்.
குறித்த போட்டியை பயிற்றுவித்து வெற்றி பாதைக்கு வழிகாட்டிய எம்.ஏ.எம். சுபியான் ஆசிரியர் அவர்களுக்கு பாடசாலை நிர்வாகம் சார்பாக தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக பாடசாலையின் அதிபர் ஐ.ஏ. நஜிம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


