ஆங்கில மொழித் தினப் போட்டியில் கல்பிட்டி அல் அக்ஸா மாணவி தேசிய மட்டத்திற்கு தெரிவு
அகில இலங்கை ஆங்கில மொழித் தின சொல்வதெழுதுதல் ( Dictation ) போட்டியில் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மாணவி லாபிர் அலி பாத்திமா பஹ்மா மாகாண மட்டப் போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார்.
கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் தரம் 6 இல் கல்வி பயிலும் மாணவி லாபிர் அலி பாத்திமா பஹ்மா ஆங்கில மொழித் தின சொல்வதெழுதுதல் ( Dictation ) போட்டியில் மாகாண மட்டத்தில் முதலாம் இடம் பெற்று தேசிய மட்டத்திற்க்கு தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
தேசிய மட்டத்தில் முதலிடத்தை பெற்று பாடசாலைக்கும் தம் பிரதேசத்திற்கும் பெருமை சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இதற்காக அயராது உழைத்து மாணவியை போட்டி நிகழ்ச்சிக்குத் தயார் செய்த பாடசாலையின் சகல ஆங்கில மொழிப் பாட ஆசிரியர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு இதற்கான வழிகாட்டல்களை வழங்கிய பாடசாலை அதிபர் யு.எம்.எம். அமீருக்கும் ( SLPS I ) பாடசாலை சமூகம் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
(அரபாத் பஹர்தீன்)