
உத்தம நபிகளார் முகம்மத் (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தை சிறப்பாக்கி வைக்கும் மீலாதுன் நபி விழா நிகழ்வு கடந்த 05.10.2025 ஞாயிற்றுக்கிழமை புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய நூர்தீன் மஷூர் திறந்த வெளியரங்கில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
நாகவில்லு ஜம்மிய்யதுல் உலமாவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வை, அதன் தலைவர் அஷ் ஷேக் அபுல்ஹுதா ஐனுல்லாஹ் (நுழாரி) அவர்கள் தலைமை தாங்கி நடத்திவைத்தார்.
குறித்த நிகழ்வின் பிரதம அதிதியாக ஜம்மிய்யதுல் உலமாவின் புத்தளக் கிளை தலைவர் அஷ் ஷேக், அல்ஹாபிழ் MBM ஜிப்நாஸ் (மிஸ்பாஹி) கலந்து சிறப்பித்தார்.
பல வருடங்களுக்குப் பின்னர் புத்தளம் எருக்கலம்பிட்டியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்ற மீலாதுன் நபி விழா நிகழ்வில், புத்தளம் எருக்கலம்பிட்டியில் உள்ள 8 குர்ஆன் மத்ரஸாக்களை சேர்ந்த சுமார் 40 மாணவர்களின் நிகழ்ச்சிகள் மேடையை அலங்கரித்ததுடன், அவர்களுக்கான பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.
நிகழ்வினை மேலும் சுவாரஷ்யமாக்கும் வகையில் பக்கீர் பாவாவின் இஸ்லாமிய கீதங்களும் அனைவரின் கவனத்தையும் அதிகம் ஈர்த்தன.
நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், புத்தளம் எருக்கலம்பிட்டியில் உள்ள 8 குர்ஆன் மத்ரஸாக்களுக்கும் விஷேட நினைவுச்சின்னங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் புத்தளம் எருக்கலம்பிட்டி நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், பாடசாலை அதிபர், மத்ரஸா அதிபர்கள், உலமாக்கள், நாகவில்லு ஜம்மிய்யதுல் உலமாவின் உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.



