அணிக்கு 7 பேர் கொண்ட லெஜண்ட் ப்ரோ சுபர் லீக் (LEGEND PRO SUPER LEAGUE) உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்றைய தினம் புத்தளம் எருக்கலம்பிட்டியில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.
புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற பழைய மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற குறித்த உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் 2022 அணியினர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
கடந்த இரு தினங்களாக (13,14) மிகவும் கோலாகலமாக இடம்பெற்ற இச் சுற்றுப்போட்டியில் சுமார் 17 அணிகள் பங்குபற்றின. ஆரம்பம் முதல் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தி 2010 மற்றும் 2022 வகுப்பு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
பலப்பரீட்சை நடத்திய 2010 மற்றும் 2022 அணிகள் தண்ட உதை மூலம் வெற்றியை தீர்மானிக்கும் போட்டியாக இறுதிப்போட்டி அமைந்தமை பார்வையாளர்களை மிகவம் உற்சாகமூட்டியது.
தண்ட உதை மூலம் 5-4 என்ற கோல் கணக்கில் 2010 அணியை 2022 அணி வெற்றி கொண்டு சம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
இதன்மூலம் 2 நாட்களாக இடம்பெற்ற சுற்றுத்தொடர் மக்களின் அமோக வரவேற்புடனும், ஆதரவுடனும் இனிதே நிறைவுபெற்றமை குறிப்பிடத்தக்கது.


