Thursday, December 4, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeERUKKALAMPIDDYநாகவில்லு குறுக்கு வீதிகளை புனரமைக்கும் பணி தீவிரம்!

நாகவில்லு குறுக்கு வீதிகளை புனரமைக்கும் பணி தீவிரம்!

சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது.

அந்த வகையில் டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் புத்தளம் மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் பிரதேச செயலகத்திற்குற்பட்ட நாகவில்லு கிராமம் முழுமையாக இந்த வெள்ள அனர்த்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பிவரும் நிலையில் நாகவில்லு கிராமத்தில் சுமார் 5 தினங்கள் மூன்று வேலைகளிலும் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டதுடன், இரண்டு தினங்களுக்கு இலவச தண்ணீர் விநியோகமும் இடம்பெற்றது.

வெள்ள அனர்த்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாகவில்லு கிராமத்தின் குறுக்கு வீதிகளை செப்பனிடும் பணிகள் நேற்றைய தினமும் இரண்டாவது நாளாக இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், புத்தளம் பிரதேச சபை கெளரவ உறுப்பினருமான ஜனாப் லரீப் காஸிம் அவர்களின் வழிகாட்டுதலில் குறித்த வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஊர் தனவந்தர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் முழுமையான நிதிப்பங்களிப்பில் நாகவில்லு கிராமத்தில் குறித்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை அனர்த்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாகவில்லு மக்களின் வீடுகளுக்கு அரச அதிகாரிகள் தற்போது கள விஜயங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

நாகவில்லு குறுக்கு வீதிகளை புனரமைக்கும் பணி தீவிரம்!

சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது.

அந்த வகையில் டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் புத்தளம் மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் பிரதேச செயலகத்திற்குற்பட்ட நாகவில்லு கிராமம் முழுமையாக இந்த வெள்ள அனர்த்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பிவரும் நிலையில் நாகவில்லு கிராமத்தில் சுமார் 5 தினங்கள் மூன்று வேலைகளிலும் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டதுடன், இரண்டு தினங்களுக்கு இலவச தண்ணீர் விநியோகமும் இடம்பெற்றது.

வெள்ள அனர்த்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாகவில்லு கிராமத்தின் குறுக்கு வீதிகளை செப்பனிடும் பணிகள் நேற்றைய தினமும் இரண்டாவது நாளாக இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், புத்தளம் பிரதேச சபை கெளரவ உறுப்பினருமான ஜனாப் லரீப் காஸிம் அவர்களின் வழிகாட்டுதலில் குறித்த வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஊர் தனவந்தர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் முழுமையான நிதிப்பங்களிப்பில் நாகவில்லு கிராமத்தில் குறித்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை அனர்த்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாகவில்லு மக்களின் வீடுகளுக்கு அரச அதிகாரிகள் தற்போது கள விஜயங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular