புத்தளம் நாகவில்லு பகுதியில் அழுகிய நிலையில் இனம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் இன்று (19.04.2025) பொது மக்களால் கண்டுபிடிக்கப்பட்டமை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புத்தளம், நாகவில்லு பகுதியில் அமைந்துள்ள டயலொக் மாவத்தை பகுதியில், பூர்த்தி செய்யப்படாத தனியார் கடை ஒன்றுக்குள் அழுகிய நிலையில் குறித்த சடலம் இன்று பொது மக்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
இன்று காலை அழுகிய துர்வாடை வீச ஆரம்பித்த பிறகே குறித்த கடைக்குள் அழுகிய நிலையில் சடலம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதுடன், உயிரிழந்த குறித்த நபர் சுமார் 3 நாட்களுக்கு முன்னரே இறந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
உயிரிழந்த நபர் நாகவில்லு பகுதியை சேர்ந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபராக இருக்குமென மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் பொலிஸாருக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை புத்தளம் போலீசார் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/enews1st.lk/videos/1705928660007583