Friday, November 7, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeERUKKALAMPIDDYநாகவில்லு பாடசாலைக்கு நவீன விஞ்ஞான ஆய்வுகூடம்!

நாகவில்லு பாடசாலைக்கு நவீன விஞ்ஞான ஆய்வுகூடம்!

நவீன விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலய வளாகத்தில் பாடசாலையின் அதிபர் ஜனாப் S.M. Husaimath அவர்களின் தலைமையில் நேற்று 06.11.2025 மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் வேண்டுகோளின்பேரில், குறித்த விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான கட்டிடம் பாடசாலை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட உள்ளது.

அந்த வகையில் அல்ஹாஹ் லுக்மான் சஹாப்தீன் (LLB, AAL), Senior Deputy Director of Customs அவர்களின் முயற்சியாலும், நிதி வழங்குனர் ஒருவரின் பங்களிப்பினாலும், நவீன விஞ்ஞான ஆய்வு கூட கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

இந் நிகழ்வில் புத்தளம் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள், புத்தளம் வலயக் கல்வி பணிப்பாளர், கோட்ட கல்வி பணிப்பாளர்கள், றினைசன்ஸ் அமைப்பின் உறுப்பினர்கள், பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள், பிரமுகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

நாகவில்லு பாடசாலைக்கு நவீன விஞ்ஞான ஆய்வுகூடம்!

நவீன விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலய வளாகத்தில் பாடசாலையின் அதிபர் ஜனாப் S.M. Husaimath அவர்களின் தலைமையில் நேற்று 06.11.2025 மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் வேண்டுகோளின்பேரில், குறித்த விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான கட்டிடம் பாடசாலை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட உள்ளது.

அந்த வகையில் அல்ஹாஹ் லுக்மான் சஹாப்தீன் (LLB, AAL), Senior Deputy Director of Customs அவர்களின் முயற்சியாலும், நிதி வழங்குனர் ஒருவரின் பங்களிப்பினாலும், நவீன விஞ்ஞான ஆய்வு கூட கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

இந் நிகழ்வில் புத்தளம் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள், புத்தளம் வலயக் கல்வி பணிப்பாளர், கோட்ட கல்வி பணிப்பாளர்கள், றினைசன்ஸ் அமைப்பின் உறுப்பினர்கள், பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள், பிரமுகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular