கிளிநொச்சியில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் பல வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளில் பல கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட ஏ9 வீதியில் உள்ள பல வர்த்தக நிலையங்கள், உதயநகர் மற்றும் விவேகானந்த நகர் ஆகிய பகுதிகளில் பல கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.
இதில் ஏ9 வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நள்ளிரவு வேளையில் கடையின் முன் பகுதி கதவை உடைத்து சுமார் 15 லட்சம் பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளதாகவும், திருடர்கள் (CCTV) பாதுகாப்பு கேமராவில் சிக்கியுள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று உதயநகர் பகுதியில் வீடு ஒன்றில் மூன்று திருடர்கள் முகமூடி அணிந்தவாறு வீட்டிற்குல் நுழையும்போது பாதுகாப்பு கேமராவில் திருடர்கள் சிக்கியுள்ளனர்.
இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.