Wednesday, August 6, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsநாட்டுக்கு முன்னுதாரணமாக மாறிய முரசுமோட்டை கல்லூரி!

நாட்டுக்கு முன்னுதாரணமாக மாறிய முரசுமோட்டை கல்லூரி!

பலபோகங்களாக பயிர்ச்செய்கைக்கு உட்படாது காணப்பட்ட கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா கல்லூரிக்கு சொந்தமான வயலில் நடுகை செய்யப்பட்ட வயலின் அறுவடை விழா பாடசாலையின் முதல்வர் அ.பங்கையற்செல்வன் தலைமையில் நடைபெற்றது.

இயந்திரம் மூலம் நாற்று நடுகை செய்யப்பட்ட வயலின் குறித்த அறுவடை நிகழ்வில் முன்னாள் வலயக்கல்விப்பணிப்பாளர் க.முருகவேல் கலந்து கொண்டு அறுவடையை ஆரம்பித்து வைத்தார்.

கல்லூரிக்கு சொந்தமான வயலில் நெல் நடுகை செய்யப்பட்டு, தற்போது அறுவடை செய்யப்படும் இந்நிகழ்வு முழு நாட்டுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந் நடவடிக்கையானது மாணவர்கள் மத்தியில் விவசாயத்தின் முக்கியத்துவத்தை வேரூண்டச்செய்வதாகவும், நாட்டில் நெல் உற்பத்தியில் தண்நிறைவான ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர்கள், புலிங்க தேவன் கமக்காரர் அமைப்பினர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

குறித்த வயல் நாற்று நடுகை முதல் அறுவடை வரையான அணைத்து நடவடிக்கைகளுக்கும் முரசுமோட்டை புலிங்கதேவன் கமக்காரர் அமைப்பினர் அனுசரனையை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular