“போதைப் பொருளுக்கு இல்லை என்று சொல்லுங்கள், வாழ்க்கைக்கு ஆம் என்று சொல்லுங்கள்” என்னும் கருப்பொருளில் இலங்கை முழுவதும் போதை அற்ற சமுதாயத்தை உருவாக்கும் செயற்திட்டத்தின் அங்குராபண நிகழ்வு மேன்மை தங்கிய ஐனாதிபதி தலைமையில் நேற்று இடம்பெற்றது.
மேலும் இன் நிகழ்வில் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய அலுவலர்கள் என பலரும் காணொளி மூலம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நிகழ்வில் இணைந்து கொண்டனர்.
அந்த வகையில் மன்னார் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்களும் காணொளி மூலம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நிகழ்வில் இணைந்து கொண்டனர்.
நிகழ்வின் போது போதைப் பொருளுக்கு எதிரானவன் நான் எனவும், போதைப் பொருள் ஒழிப்பு செயற்பாடுகளுக்கு இலங்கை பிரஜை என்ற அடிப்படையில் ஆதரவு தருவேன் என சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.



 
 
 
