Sponsored Advertisement
HomeMuslim Worldநிலச்சரிவில் ஒரு கிராமமே அழிந்தது

நிலச்சரிவில் ஒரு கிராமமே அழிந்தது

ஆப்ரிக்க நாடான சூடானின் மாரா என்ற மலைப்பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 1000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

நிலச்சரிவில் அழிந்த கிராமத்தில் இருந்து ஒரே ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மேற்கு சூடானில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி கொட்டிய பெருமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. உள்நாட்டு போரால் சீரழிந்துள்ள சூடானில் இயற்கை பேரழிவால் மக்கள் பெருந்துயரம் அடைந்துள்ளனர்.

மீட்பு பணிகளை மேற்கொள்ள ஐ.நா., சர்வதேச தொண்டு நிறுவனம் உதவ வேண்டும் என சூடான் விடுதலை இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சூடானில் உள்நாட்டு போர் நடந்துவரும் நிலையில் மக்கள் மாரா பகுதியில் தஞ்சமடைந்திருந்த நிலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

நிலச்சரிவில் ஒரு கிராமமே அழிந்தது

ஆப்ரிக்க நாடான சூடானின் மாரா என்ற மலைப்பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 1000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

நிலச்சரிவில் அழிந்த கிராமத்தில் இருந்து ஒரே ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மேற்கு சூடானில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி கொட்டிய பெருமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. உள்நாட்டு போரால் சீரழிந்துள்ள சூடானில் இயற்கை பேரழிவால் மக்கள் பெருந்துயரம் அடைந்துள்ளனர்.

மீட்பு பணிகளை மேற்கொள்ள ஐ.நா., சர்வதேச தொண்டு நிறுவனம் உதவ வேண்டும் என சூடான் விடுதலை இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சூடானில் உள்நாட்டு போர் நடந்துவரும் நிலையில் மக்கள் மாரா பகுதியில் தஞ்சமடைந்திருந்த நிலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.