2025 ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, வனஸ்பதி தேசிய திட்டத்தின் கீழ், 40,684.99 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்ட இலங்கையின் இரண்டாவது பெரிய காடான நில்கல (Nilgala) காடு, ஒரு காப்பகமாக (Reserve) மாற்றப்பட்டதுடன், அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை போன்ற வெப்பமண்டல நாடுகளுக்கு பாதுகாக்கப்பட்ட காடுகளை உருவாக்குவதும் அவற்றைப் பாதுகாப்பதும் மிகவும் முக்கியமானது;
இந்தச் செயல்முறையானது சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, வனவிலங்குகளுக்கான ஊட்டமளிக்கும் வலயங்களை உருவாக்குகிறது. இதன் மூலம், வனவிலங்குகள் மற்றும் மனிதர்களுக்கிடையிலான சகவாழ்வுடனான ஒரு பசுமையான தேசத்தை நோக்கிய பயணம் எளிதாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



