கடலில் மிதந்த பாட்டிலில் இருந்து திரவத்தை குடித்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக நுரச்சோலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு சந்தேகத்திற்கிடமான திரவத்தை குடித்த ஒருவர் 28 ஆம் தேதி இரவும், மற்றொருவர் 29 ஆம் தேதி அதிகாலையிலும் உயிரிழந்துள்ளனர்.
கல்பிட்டி, நரக்கல்லிய பகுதியில் வசிக்கும் 28 வயதுடைய இரு மீனவர்களே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நுரச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு மீனவ கிராமத்தில் நான்கு மீனவர்கள் கொண்ட குழு மது அருந்திக் கொண்டிருந்தனர்.
இதற்கிடையில், கடலில் மிதந்த ஒரு பாட்டிலை எடுத்து உள்ளே இருந்த திரவத்தை அவர்கள் குடித்தனர்.
நுரச்சோலை பொலிஸார் கூறுகையில், திரவத்தை குடித்த இரண்டு பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.


