Thursday, April 17, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsநுரைச்சோலையில் சிக்கிய கடத்தல் பொருட்கள்!

நுரைச்சோலையில் சிக்கிய கடத்தல் பொருட்கள்!

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1142 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் சந்தேக நபரொருவர் நுரைச்சோலையில் கடற்படையினரால் கைது.

கல்பிட்டி, நுரைச்சோலை தலுவ பகுதியில் நேற்று கடற்படையினரால் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் ஆயிரத்து நூற்று நாற்பத்திரண்டு (1142) கிலோகிராம் மற்றும் எழுநூறு (700) கிராம் உலர்ந்த மஞ்சள் பொதியை ஏற்றிச் சென்ற சந்தேக நபரொருவர் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்.

கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற ஆட்கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பற்காக, கடற்படையினர் இலங்கையைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடல் பகுதியை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அதன்படி, 2025 ஏப்ரல் 10 ஆம் திகதி காலை கல்பிட்டி, நுரைச்சோலையின் தலுவ பகுதியில், வடமேற்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த இலங்கை கடற்படை கப்பல் விஜய மேற்கொண்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான வண்டி கவனிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

சந்தேகத்திற்கிடமான படகொன்றை அவதானித்து பரிசோதிக்கப்பட்டபோது அங்கு சட்டவிரோதமான முறையில் கெப் வண்டியின் மூலமாக கொண்டு செல்ல ஆயத்தமாக இருந்த முப்பத்தொரு (31) பைகளாக பொதி செய்யப்பட்ட ஆயிரத்து நூற்று நாற்பத்திரண்டு (1142) கிலோ எழுநூறு (700) கிராம் உலர் மஞ்சளுடன், சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டதுடன், கெப் ரக வண்டியும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டத்து.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மதுரங்குளிய பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர், உலர்ந்த மஞ்சள் தொகை மற்றும் கெப் வண்டி ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular