நைஜீரியாவில் ஆயுதமேந்திய கும்பல் ஒரு கிராமத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 37 பேர் பலியானார்கள்.
நைஜீரியாவில் வடக்கு பகுதியில் நைஜர் மாகாணம் உள்ளது. அங்கு உள்ள கசுவான் தாஜி என்ற கிராமத்திற்குள் நேற்று முன்தினம் புகுந்த ஆயுதமேந்திய நபர்கள் அங்கிருந்த வீடுகள், உள்ளூர் சந்தை ஆகியவற்றை அடித்து நொறுக்கினர். மேலும் பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் 30 பேர் பலியானார்கள் என்று நைஜர் போலீஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
ஆனால் உள்ளூரில் வசிக்கும் மக்கள் கூறுகையில், இந்த சம்பவத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.


