பாடசாலைகளில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பட்டதாரி சங்க பிரதிநிதிகள் பிரதமருடன் சந்திப்பு
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, கல்வி அமைச்சில் பட்டதாரிகள் சங்கம் மற்றும் அகில இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்துடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.
பாடசாலைகளில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர், நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்து தீர்ப்பு கிடைத்த பிறகு, ஆசிரியர் சேவை அரசியலமைப்பின்படி, தற்போதுள்ள சட்ட கட்டமைப்பிற்குள் எதிர்காலத்தில் நியமனங்கள் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.


