மே 6ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் 2025.05.04 அன்று சம்பந்தப்பட்ட கிராம அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் திரு. நாலக கலுவேவாவால் ஒரு கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.




