பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மதன மோதக (லேகியம்) விற்பனை செய்த ஒருவரை வென்னப்புவ காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
வென்னப்புவ நகரில் ஆண்கள் பாடசாலைக்கு அருகில் இயங்கிவந்த ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்யும் ஒரு வணிக நிறுவனத்தில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து மதன மோதக (லேகியம்) விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, விற்பனையாளரை நேற்று 27.10.2025 காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குறித்த ஆயுர்வேத வணிக நிறுவனத்தில் கஞ்சா கலக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 250 பாக்கெட் மதன மோதக (லேகியம்) பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட நபர் குளியாபிட்டி பகுதியை சேர்ந்த 23 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
குறித்த மதன மோதக (லேகியம்) பாக்கெட் ஒன்று பாடசாலை மாணவர்களுக்கு 250 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும், கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் இதற்கு முன்னரும் மதன மோதக (லேகியம்) விற்பனை செய்யப்பட விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டவர் எனவும் போலீசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


