கிளிநொச்சி கல்மடு நகர் பகுதியில் இன்று 06.01.2026 ஆலய வளாகத்தில் சிரமதான பணியில் ஈடுபட்ட இளைஞன் பாம்பு கடிக்கு இலக்கான நிலையில் தர்மபுரம் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட போது குறித்த இளைஞர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து குறித்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை இராமநாதபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சம்பவத்தில் 23 வயதுடைய சிறிகாந்தன் கிருசிகன் கல்மடுநகர் என்னும் முகவரியைச் சேர்ந்த இளைஞனே பரிதாபகரமாக உயிரளந்துள்ளார்.


