(உடப்பு க.மகாதேவன்)
சிலாபம் வாரியபொல வீதியில் பிங்கிரிய நகரில் இன்று செவ்வாய்க்கிழமை
(21) லொறி ஒன்றுடன் வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
நாட்டில் மிக மோசமான காலநிலை நிலவிவரும் நிலையில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில், வேன் சாரதி கவனக்குறைவாக வண்டியை செலுத்தியதில் தேங்காய்களை ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் சாரதிகள் இருவரும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ள நிலையில் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பிங்கிரிய போலீசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
