ஜூட் சமந்த
மீன்பிடிக்கச் சென்ற படகு கவிழ்ந்ததில் இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு காணாமல் போனவர்கள் சிலாபம் – குருச பாடுவ பகுதியைச் சேர்ந்த வர்ணகுலசூரிய ரொஷான் பெர்னாண்டோ (46 வயது) மற்றும் சுஜித் குமார (45 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் தலா இரண்டு பாடசாலை செல்லும் பிள்ளைகள் இருப்பதாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மீனவர்கள் இருவரும் இன்று 19 ஆம் திகதி அதிகாலை 2.30 மணியளவில் குருச பாடுவ இறங்குதுறையிலிருந்து மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் பயணித்த படகு ஆழ்கடலில் மற்றுமொரு மீனவர் குழுவினால் கண்டெடுக்கப்பட்ட போதிலும், அதில் பயணித்த இருவர் பற்றிய எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
கடலுக்குச் சென்ற ஏனைய மீனவர்கள் காணாமல் போன இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்ட போதிலும், இதுவரை அவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று சிலாபம் வெல்ல மீனவர் சங்கத்தின் தலைவர் ஆண்டன் ரொஷாந்த தெரிவித்தார்.


