Monday, March 10, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsபுணர்வாழ்வு வைத்தியசாலையில் தற்கொலை!

புணர்வாழ்வு வைத்தியசாலையில் தற்கொலை!

கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள புணர்வாழ்வு வைத்தியசாலையில் தூக்கிட்டு தன்னை தானே மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று இன்று பதிவாகியுள்ளது.

போதை பழக்கத்திற்கு உட்பட்டவர் என சந்தேகிக்கப்படும் குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து புனர்வாழ்வு பெறுவதற்காக நேற்றைய தினம் (08.03.2025) தர்மபுரம் புணர்வாழ்வு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோதே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமா இனம்காணப்பட்ட குறித்த நபர் கருவா கிளிநொச்சி திருநகர் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய எஸ். லக்சன் என்பவர் ஒரு பிள்ளையின் தந்தை எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்கள் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நிருபர் ஆனந்தன்

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular