புகையிரத சாரதிகள் மற்றும் ஒழுங்குமுறை பதவிகளுக்கான தகுதியான நபர்களுக்கு நியமனக் கடிதங்கள்
இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் வெற்றிடமாகவுள்ள
புகையிரத சாரதி மற்றும் ஒழுங்கு முறைப் பதவிகளுக்காக திறந்த போட்டிப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றவர்களுக்காக நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, நேற்று (14) போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தலைமையில் நடைபெற்றது.
புகையிரதத் திணைக்களத்தில் நீண்டகாலமாகக் காணப்பட்ட சாரதி பதவிகளுக்காக 85 புதிய சாரதிகள் மற்றும் 06 கட்டுப்பாட்டாளர்களுக்காக இதன் போது பிரதி அமைச்சரினால் நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.



