Monday, February 24, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsபுதுகுடியிருப்பு பகுதியில் கோர விபத்து!

புதுகுடியிருப்பு பகுதியில் கோர விபத்து!

தர்மபுரம், புது குடியிருப்பு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தர்மபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம், புது குடியிருப்பு பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த ஹையஸ் ரக வேன் ஒன்று, பரந்தன் பகுதியில் இருந்து விசுவமடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவ நபர் படுகாயம் அடைந்த நிலையில் தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேலதிக சிகிச்சைக்காக தருமபுரம் வைத்தியசாலையிலிருந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலை மாற்றப்பட்ட நிலையில், அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஹையஸ் வேனில் பயணித்த ஒருவரும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பாக தர்மபுரம் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி நிருபர் ஆனந்தன்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular