Thursday, May 22, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeERUKKALAMPIDDYபுத்தளத்தில் இடம்பெற்ற ஒன்லைன் பண மோசடி!

புத்தளத்தில் இடம்பெற்ற ஒன்லைன் பண மோசடி!

ஒன்லைன் பண மோசடி மூலம் சுமார் 5 லட்சம் ரூபாய் கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று புத்தளம் நாகவில்லு பகுதியில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

மிகவும் சூட்சுமமான முறையில் வங்கி கணக்கு திருடப்பட்டு, வங்கி கணக்கு உரிமையாளரின் வங்கி கணக்கில் இருந்து சுமார் 5 லட்சம் ரூபாய் கொள்ளையிடப்பட்ட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை இன்றைய தினமும் (22) ஒன்லைன் பண மோசடி செய்யும் கும்பல் ஒன்றிடமிருந்து பண மோசடி செய்வதற்காக புத்தளம் பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு 071 583 6145 என்ற இலக்கத்திலிருந்து தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளதாகவும், மேலதிக தகவல்கள் பெற முயன்றபோது கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அண்மைக்காலமாக ஒன்லைன் பண மோசடிகள் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அரசு மற்றும் பொலிஸ் திணைக்களங்களினால் பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தும், இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுவது அதிரித்தவண்ணமே உள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் அண்மைக்காலமாக வாட்சப் கணக்குகள் முடக்கப்படும் சம்பவங்களும் அதிரித்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அறிமுகமில்லாத எவரிடமிருந்தும் வரும் தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் வாட்சப் செய்திகளுக்கு உங்கள் வங்கிக் கணக்குகள் பற்றிய விபரங்களை வழங்குவதை தவிர்ப்பதன் மூலம் இவ்வாறான ஒன்லைன் பண மோசடிகளை முறியடிக்க முடியும் என்பதை மிகவும் ஆழமாக மனதில் பதித்துக்கொள்ளவும்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular