Tuesday, June 10, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsபுத்தளத்தில் இடம்பெற்ற கோர விபத்து!

புத்தளத்தில் இடம்பெற்ற கோர விபத்து!

புத்தளம் கொழும்பு பிரதான வீதியில், புத்தளம் கொழும்பு முகத்திடலுக்கு அண்மித்த புத்தளம் பெளத்த மத்திய நிலையத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

புத்தளம் நகரை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் தனியார் பஸ் ஒன்று மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலே உயிரிழந்ததாகவும் புத்தளம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கரம்பை உலுக்காப்பள்ளத்தை வசிப்பிடமாக கொண்ட 56 வயது மதிக்கத்தக்க முஹம்மது இஸ்மாயீல் ஜெமீல் என்பவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவரின் உடல் புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை புத்தளம் போலீசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular