இலங்கை கடற்படையினர், 2025 ஜூன் 30 முதல் ஜூலை 10 வரை புத்தளம் மற்றும் கல்பிட்டி கடற்கரை மற்றும் கடல் பகுதிகளில் கலால் துறையுடன் இணைந்து மேற்கொண்ட சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 1307 கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்களும் இரண்டு (02) டிங்கிகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளை புத்தளம் கலால் அலுவலகத்துடன் இணைந்து புத்தளம், பாரமுனை, வெல்லமுண்டலம் மற்றும் உச்சமுனை ஆகிய பகுதிகளில் புத்தளம் மற்றும் கல்பிட்டி ஆகிய இடங்களில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் பீடி 1307 கிலோகிராம் இலைகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் இரண்டு (02) டிங்கி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
மேலும், இந்த நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், பீடி இலைகள் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.