புத்தளத்தில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 468 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
2026 மார்ச் 26 ஆம் திகதி இரவு புத்தளம், தலவில, எரம்புகொடெல்ல கடலோரப் பகுதியில் இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் நானூற்று அறுபத்தெட்டு (468) கிலோகிராம் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதன்படி, புத்தளம், தலவில, எரம்புகொடெல்ல கடலோரப் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான விஜயவினால் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, பதினைந்து (15) சந்தேகத்திற்கிடமான பைகளில் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு, கடற்படை நடவடிக்கைகளின் போது கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் நானூற்று அறுபத்தெட்டு (468) கிலோகிராம் பீடி இலைகள் இவ்வாறு கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக புத்தளம் மதுவரி அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.


