ஜூட் சமந்த
புத்தளம்-அனுராதபுரம் பிரதான வீதியில் 9ஆவது மைல்கல்லில் இடிந்து விழுந்த கான்கிரீட் பாலத்திற்கு பதிலாக புதிய இரும்பு பாலம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் வீதி மேம்பாட்டு அதிகாரசபை அலுவலகம் தெரிவித்துள்ளது.
நிலவும் மோசமான வானிலை காரணமாக பாலம் இடிந்து விழுந்தது.
இதன் காரணமாக, புத்தளம்-அனுராதபுரம் வீதியில் அனைத்து போக்குவரத்தும் ஸ்தம்பித்தது.
புதிய பாலத்தின் விரைவான கட்டுமானத்திற்காக இராணுவ வீரர்கள், கருவலகஸ்வெவ பிரதேச செயலகம் மற்றும் கருவலகஸ்வெவ பிரதேச செயலகம் ஆகியவை வீதி மேம்பாட்டு அதிகாரசபைக்கு உதவி செய்தன.
இதன்மூலம் குறித்த பாலம் புனரமைக்கப்பட்டு போக்குவரத்து பாவனைக்கு திறந்து விடப்பட்டுள்ளதாக த்தளம் வீதி மேம்பாட்டு அதிகாரசபை தெரிவித்துள்ளது.





