புத்தளம் மாநகர சபையின் பொது நூலகத்திற்கு தேசிய ரீதியில் கிடைத்த கெளரவம்!
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தினை அதிகப்படுத்த புத்தளம் மாநகர சபையின் பொது நூலகம் சிறப்பான வேலைத்திட்டங்களை செயல்படுத்தியமைக்காக (2024) நேற்று (20) தேசிய நூலக ஆவணவக்கல் சபையினால் கௌரவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விருதினை புத்தளம் பொது நூலகத்தின் பிரதம நூலகரும், பட்டய நூலகரும், இலங்கை நூலகர் சங்கத்தின் நூலக தகவல் விஞ்சாபன விரிவுரையாளருமான கே.ம். நிஷாத் பெற்றுக்கொண்டார்.
புத்தளம் மாநகர சபையின் பொது நூலகம் கடந்த பல ஆண்டுகளாக சிறப்பாக செயற்பட்டு வந்திருந்ததுடன், மன்னார் எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த புத்தளம் பொது நூலகத்தின் பிரதம நூலகர் கே.ம். நிஷாத் கடந்த சில காலங்களுக்கு முன்னர் கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் பல பல முக்கிய வேலைத்திட்டங்களை அறிமுகப்பிடுத்தி இருந்தார்.
அந்த வகையில் அவரின் அர்பணிப்பான சேவையுடனும், புத்தளம் மாநகர சபையின் சிறப்பான வழிகாட்டுதலிலும், புத்தளம் மாநகர சபையின் பொது நூலகத்திற்கு குறித்த கெளரவம் கிடைக்கபெற்றமை விஷேட அம்சமாகும்.



