ஜூட் சமந்த
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Gov Pay “செயல்பாடு”, போக்குவரத்து விதிமீறல்களைச் செய்யும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஓட்டுநர்கள் உடனடியாக அபராதம் செலுத்த உதவும் என்று போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கான துணை காவல் பரிசோதகர் (DIG) W.P.J. சேனாதீர தெரிவித்தார்.
புத்தளம் மாவட்டத்தில் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் காவல்துறை OIC களுக்கு Gov Pay “செயல்பாட்டை” அறிமுகப்படுத்துவதற்காக சிலாபத்தில் நடைபெற்ற நிகழ்வில் DIG இவ்வாறு தெரிவித்தார்.
Gov Pay “செயல்பாட்டை” பயன்படுத்தக்கூடிய மொபைல் போன்கள் புத்தளம் மாவட்டத்தில் உள்ள 23 காவல் நிலையங்களுக்கும் விநியோகிக்கப்பட்ட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய துணை காவல் பரிசோதகர் (DIG);
புத்தளம் மாவட்டத்தில் தினமும் ஏராளமான மக்கள் பயணம் செய்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.
அவர்களில் புனித யாத்திரை மற்றும் பல்வேறு சுற்றுலா நடவடிக்கைகளுக்காக வெளிப் பகுதிகளிலிருந்து வருபவர்களும் அடங்குவர். தினசரி சில ஓட்டுநர்கள் செய்யும் போக்குவரத்து மீறல்களுக்கு காவல்துறை அதிகாரிகள் அபராதம் விதிக்கின்றனர்.
அபராதம் பெறும் வெளிப் பகுதிகளிலிருந்து வரும் ஓட்டுநர்கள் இதுபோன்ற சூழ்நிலைகளில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம்.
ஏனெனில் சில நேரங்களில், அபராதம் விதிக்கப்படும் இடம் மற்றும் நேரத்தைப் பொறுத்து, ஓட்டுநர்களால் தொகையை செலுத்த முடியாது. எனவே, பல ஓட்டுநர்கள் அபராதத்தை செலுத்தவும், தங்கள் ஓட்டுநர் உரிமத்தை திரும்பப் பெறவும் இந்தப் பகுதிக்குத் திரும்பி வர வேண்டியுள்ளது.
இருப்பினும், அறிமுகப்படுத்தப்படும் Gov Pay “ஆப்”-ஐப் பயன்படுத்துவதன் மூலம், ஓட்டுநர்கள் அந்த இடத்திலேயே அபராதத்தைச் செலுத்தி தங்கள் ஓட்டுநர் உரிமத்தைத் திரும்பப் பெற முடியும்.
எதிர்காலத்தில், போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் Gov Pay “ஆப்” கொண்ட தொலைபேசிகளை வழங்குவோம்.
ஒரு காவல்துறை அதிகாரியிடம் Gov Pay “ஆப்” கொண்ட தொலைபேசி இல்லையென்றால், ஓட்டுநர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்குச் சென்று சேவையை அணுகலாம் என தெரிவித்தார்.
நாட்டில் உள்ள 205 அரசு நிறுவனங்களில் 3,068 சேவைகளுக்கு Gov Pay செயலி தற்போது பயன்படுத்தப்பட்டுள்ளது. அரசு நிறுவனங்களின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் முன்னோடியாக Gov Pay செயலியை அறிமுகப்படுத்தலாம் என நி Lanka Pay தலைமை செயல்பாட்டு மேலாளர் லக்ஷ்மன் லக்தாஸ் தெரிவித்தார்.
நிகழ்வில் கலந்துகொண்டு பேசியபோதே Lanka Pay தலைமை செயல்பாட்டு மேலாளர் லக்ஷ்மன் லக்தாஸ் இதனை தெரிவித்துள்ளார்.
DIG தமயந்த விஜயஸ்ரீ, புத்தளம் பிரிவு SSP மகேஷ் பெரேரா, சிலாபம் பிரிவு SSP ரோஹன் பெரேரா ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.



