தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் இதுவரை சுமார் 155 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் நிவாரண சேவைகள் மையம் (NDRSC) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் புத்தளம் மாவட்டத்தின் 14 கிராம சேவகர் பிரிவுகளில், சுமார் 155 குடும்பங்களைச் சேர்ந்த 562 பேர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்டத்தின் 10 பிரதேச செயலகங்களுக்கு உற்பட்ட 155 குடும்பங்களை சேர்ந்த 562 பேர் இவ்வாறு சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிலாபம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அம்பகந்ததவள மற்றும் சவரான கிராம சேவகர் பிரிவில் 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், மொத்தமாக 12 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாத்தாண்டிய பிரதேச செயலகத்தின் தெற்கு முது கட்டுவ பிரிவில் உள்ள கால்நடை அலுவலக வளாகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிலாபம் சவாரான பகுதியில் உள்ள சமூக மண்டபம் ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





