Friday, February 13, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsபுயல் நிவாரண நிதியை அரசிடம் ஒப்படைத்த இரு முதியவர்கள்!

புயல் நிவாரண நிதியை அரசிடம் ஒப்படைத்த இரு முதியவர்கள்!

அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு வழங்கப்பட்ட தலா 5 இலட்சம் ரூபாய் நட்டஈட்டுத் தொகையை, தங்களை விட அதிகப் பாதிப்புக்குள்ளான மக்களுக்குப் பயன்படுத்துமாறு கூறி இரு முதியவர்கள் அரசிடம் மீள ஒப்படைத்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் இலங்கையின் மகவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உன்னத நோக்கம் கொண்ட முதியவர்கள்

மகவ பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாகடுவாவ பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய எச்.எம்.ஏ. ரன்பண்டா மற்றும் மானிங்கமுவ பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய ஆர்.ஐ.பி. டிங்கிரி அம்மா ஆகியோரே இந்த உன்னதமான செயலைச் செய்தவர்களாவர்.

சுழற்காற்று காரணமாக இவர்களது சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக மதிப்பிடப்பட்ட தலா 5 இலட்சம் ரூபாய் (மொத்தம் 10 இலட்சம்) நட்டஈட்டுத் தொகையைத் தங்களுக்கு வேண்டாம் எனவும், அதனை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட அனாதரவான மக்களுக்குப் பயன்படுத்துமாறும் கோரி இவர்கள் பிரதேச செயலாளருக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.

“அரசு பணம் என்பது மக்கள் பணம்”

தங்களது இந்தத் தீர்மானத்திற்கான காரணத்தை விளக்கிய ரன்பண்டா, தமக்கு ஏற்பட்ட சேதத்தை விடவும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மக்கள் சமூகத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். “என்னை விட வசதியற்றவர்கள் பலர் உள்ளனர். இந்த அனர்த்தத்தால் எனக்குப் பாதிப்பு ஏற்பட்டது உண்மைதான், ஆனால் என்னால் இன்னும் மீண்டும் எழுந்து நிற்கும் சக்தி இருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், “இந்த அனர்த்தத்தால் முழு வாழ்வாதாரத்தையும் இழந்து, உணவிற்குக் கூட வழியின்றித் தவிக்கும் மக்களை நான் கண்டேன். அரசாங்கத்தின் பணம் என்பது மக்களின் பணம். எனவே, இந்தப் பணம் என்னை விட மிகவும் பாதிக்கப்பட்ட ஒருவருக்குச் சென்றால் நான் மகிழ்ச்சியடைவேன்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக வழங்கப்பட்ட 25,000 ரூபாவைக் கொண்டு சேதமடைந்த சில பகுதிகளைத் தாம் ஏற்கனவே சரிசெய்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூகத்திற்கான சிறந்த பாடம்

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த மகவ பிரதேச செயலாளர் நதுன் ஆர். சம்பத், நட்டஈடுகளைப் பெற்றுக்கொள்ள மக்கள் முண்டியடிக்கும் இக்காலத்தில், தங்களுக்குக் கிடைத்த தொகையைக்கூட மற்றவர்களுக்காகத் தியாகம் செய்த இவர்களின் செயல் முழுச் சமூகத்திற்கும் ஒரு சிறந்த பாடம் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தத் தொகையானது உரிய அரச நடைமுறைகளுக்கு அமைய மீண்டும் அனர்த்த நிவாரணப் பணிகளுக்காகவே பயன்படுத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

இந்த முதியவர்களின் செயல் மனிதாபிமானம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உலகிற்கு உணர்த்தும் ஒரு உன்னத சான்றாக அமைந்துள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

புயல் நிவாரண நிதியை அரசிடம் ஒப்படைத்த இரு முதியவர்கள்!

அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு வழங்கப்பட்ட தலா 5 இலட்சம் ரூபாய் நட்டஈட்டுத் தொகையை, தங்களை விட அதிகப் பாதிப்புக்குள்ளான மக்களுக்குப் பயன்படுத்துமாறு கூறி இரு முதியவர்கள் அரசிடம் மீள ஒப்படைத்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் இலங்கையின் மகவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உன்னத நோக்கம் கொண்ட முதியவர்கள்

மகவ பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாகடுவாவ பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய எச்.எம்.ஏ. ரன்பண்டா மற்றும் மானிங்கமுவ பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய ஆர்.ஐ.பி. டிங்கிரி அம்மா ஆகியோரே இந்த உன்னதமான செயலைச் செய்தவர்களாவர்.

சுழற்காற்று காரணமாக இவர்களது சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக மதிப்பிடப்பட்ட தலா 5 இலட்சம் ரூபாய் (மொத்தம் 10 இலட்சம்) நட்டஈட்டுத் தொகையைத் தங்களுக்கு வேண்டாம் எனவும், அதனை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட அனாதரவான மக்களுக்குப் பயன்படுத்துமாறும் கோரி இவர்கள் பிரதேச செயலாளருக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.

“அரசு பணம் என்பது மக்கள் பணம்”

தங்களது இந்தத் தீர்மானத்திற்கான காரணத்தை விளக்கிய ரன்பண்டா, தமக்கு ஏற்பட்ட சேதத்தை விடவும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மக்கள் சமூகத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். “என்னை விட வசதியற்றவர்கள் பலர் உள்ளனர். இந்த அனர்த்தத்தால் எனக்குப் பாதிப்பு ஏற்பட்டது உண்மைதான், ஆனால் என்னால் இன்னும் மீண்டும் எழுந்து நிற்கும் சக்தி இருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், “இந்த அனர்த்தத்தால் முழு வாழ்வாதாரத்தையும் இழந்து, உணவிற்குக் கூட வழியின்றித் தவிக்கும் மக்களை நான் கண்டேன். அரசாங்கத்தின் பணம் என்பது மக்களின் பணம். எனவே, இந்தப் பணம் என்னை விட மிகவும் பாதிக்கப்பட்ட ஒருவருக்குச் சென்றால் நான் மகிழ்ச்சியடைவேன்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக வழங்கப்பட்ட 25,000 ரூபாவைக் கொண்டு சேதமடைந்த சில பகுதிகளைத் தாம் ஏற்கனவே சரிசெய்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூகத்திற்கான சிறந்த பாடம்

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த மகவ பிரதேச செயலாளர் நதுன் ஆர். சம்பத், நட்டஈடுகளைப் பெற்றுக்கொள்ள மக்கள் முண்டியடிக்கும் இக்காலத்தில், தங்களுக்குக் கிடைத்த தொகையைக்கூட மற்றவர்களுக்காகத் தியாகம் செய்த இவர்களின் செயல் முழுச் சமூகத்திற்கும் ஒரு சிறந்த பாடம் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தத் தொகையானது உரிய அரச நடைமுறைகளுக்கு அமைய மீண்டும் அனர்த்த நிவாரணப் பணிகளுக்காகவே பயன்படுத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

இந்த முதியவர்களின் செயல் மனிதாபிமானம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உலகிற்கு உணர்த்தும் ஒரு உன்னத சான்றாக அமைந்துள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular