ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் கைது
குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் நேற்று 2025.11.13 அன்று குற்றவியல் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் பெருமளவான ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அந்த வகையில் 287 கிராம் ஹெராயின் 650 கிராம், 168 கிராம் ஐஸ் போதைப்பொருட்கள், 480 கிராம் 480 மி.கி. போதைப்பொருட்களுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டு குளியாப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் உடுபத்தாவ பகுதியில் வசிக்கும் 32 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
குளியாப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


