Wednesday, July 2, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsபொத்துவில்லில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பு!

பொத்துவில்லில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பு!

பொத்துவில் பிரதேச சபை முன்னாள் தவிசாளரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான அப்துல் வாசித் மற்றும் முன்னாள் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம் எம். முஷர்ரப் ஆகியோருக்கிடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு இன்று (26) அங்கு கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் இடம் பெற்றது.

இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் இணைந்துகொண்டதை அடுத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் அப்துல் வாசித் மற்றும் கட்சிக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்தே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் உலமாக்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பிரதித் தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர், பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர் உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் ஆகியோரும் உடனிருந்தனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular