பொத்துவில் கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (18) காலை இடம்பெற்றுள்ளது.
அம்பாறை சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 23 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் பொத்துவில் கடலில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கியுள்ளனர்.
இதன்போது அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர், கடலில் மூழ்கிய இருவரையும் அதிரடியாக காப்பாற்றி அவர்களுக்கு முதலுதவி அளித்துள்ளனர்.
இவர்களின் இந்த செயல் சினிமா காட்சி போல் இருந்ததாகவும், பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரின் இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.