போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்றைய தினம் 03.11.2025 தருமபுரம் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு தருமபுர போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர், சிறுவர் நன்னடத்தை பிரிவினர், போதைப் பொருள் பாவனையில் ஏற்படக்கூடிய தீமைகள் தொடர்பாகவும் தொலைபேசியினால் ஏற்படும் பாரிய அளவிலான பாதிப்புகள் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நடாத்தப்பட்டது.
இதன் போது தர்மபுரம் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். திசநாயக்க, தருமபுர மத்திய கல்லூரி அதிபர் திருமதி இந்திராணி, கண்டாவலைப் பிரதேச செயலகத்தின் சிறுவர் நன்னடத்தை பிரிவினர் ஆகியோர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆக்கபூர்வமான தெளிவூட்டல்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



