Friday, March 27, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsபோதையில் மகனை கோடரியால் வெட்டிக்கொன்ற தந்தை!

போதையில் மகனை கோடரியால் வெட்டிக்கொன்ற தந்தை!

ஜூட் சமந்த

ஆணமடுவ – சொஹன்கல்ம பகுதியில் தந்தை ஒருவர் தனது மகனை கோடாரியால் தாக்கி படுகொலை செய்துள்ளதாக மஹகும்புக்கடவல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சோகமான சம்பவம் நேற்று 26 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் ஆணமடுவ – சொஹன்கல்ம பகுதியைச் சேர்ந்த ராஜகருணா ஹேரத் முடியன்சேலாகே திலீப மதுசங்க (26 வயது) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த மகனுக்கும் சந்தேகநபரான தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் நடந்த சமயத்தில் தந்தை மற்றும் மகன் ஆகிய இருவருமே மது அருந்தியிருந்ததாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தக் கொலையைச் செய்த பின்னர், 63 வயதுடைய சந்தேகநபரான தந்தை அப்பகுதியிலிருந்து தப்பியோடித் தலைமறைவாகியுள்ளார். தலைமறைவாகியுள்ள தந்தையைக் கைது செய்வதற்கான விசேட விசாரணைகளை மஹகும்புக்கடவல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகள் நடைபெறவுள்ள நிலையில், மஹகும்புக்கடவல பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

போதையில் மகனை கோடரியால் வெட்டிக்கொன்ற தந்தை!

ஜூட் சமந்த

ஆணமடுவ – சொஹன்கல்ம பகுதியில் தந்தை ஒருவர் தனது மகனை கோடாரியால் தாக்கி படுகொலை செய்துள்ளதாக மஹகும்புக்கடவல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சோகமான சம்பவம் நேற்று 26 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் ஆணமடுவ – சொஹன்கல்ம பகுதியைச் சேர்ந்த ராஜகருணா ஹேரத் முடியன்சேலாகே திலீப மதுசங்க (26 வயது) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த மகனுக்கும் சந்தேகநபரான தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் நடந்த சமயத்தில் தந்தை மற்றும் மகன் ஆகிய இருவருமே மது அருந்தியிருந்ததாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தக் கொலையைச் செய்த பின்னர், 63 வயதுடைய சந்தேகநபரான தந்தை அப்பகுதியிலிருந்து தப்பியோடித் தலைமறைவாகியுள்ளார். தலைமறைவாகியுள்ள தந்தையைக் கைது செய்வதற்கான விசேட விசாரணைகளை மஹகும்புக்கடவல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகள் நடைபெறவுள்ள நிலையில், மஹகும்புக்கடவல பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular