Sunday, August 2, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsமகரையில் கொழுந்துவிட்டு எறிந்த தீ: துப்பாக்கிச் சூடு, ஹெலிகொப்டர் முற்றுகை!

மகரையில் கொழுந்துவிட்டு எறிந்த தீ: துப்பாக்கிச் சூடு, ஹெலிகொப்டர் முற்றுகை!

மகர சிறைச்சாலையின் சுவர்களுக்குள் நேற்றைய தினம் (01 வெள்ளிக்கிழமை) கைதிகளுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் இடையே திடீரென வெடித்த வாக்குவாதம், நொடிப் பொழுதில் பெரும் கலவரமாக உருவெடுத்தது. அமைதியாக இருக்க வேண்டிய சிறை வளாகம், கூச்சல்களினாலும் கூச்சல் குழப்பங்களினாலும் அதிரத் தொடங்கியது. கைதிகள் சிலர் கட்டுப்பாட்டை மீறி வன்முறையில் இறங்கியதைத் தொடர்ந்து, சிறையின் பிரதான ஜெயிலர் அலுவலகம் மற்றும் ஒழுக்காற்றுப் பிரிவு என்பவற்றுக்குத் தீ வைக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

புகை மண்டலமும் பதற்றமும் சிறையைச் சூழ, நிலைமை முற்றாகக் கைமீறிப் போனது. இதையடுத்து, நிலமையை உடனடியாகக் கட்டுக்குள் கொண்டுவரக் காவல் துறையினர், விசேட அதிரடிப்படை (STF) மற்றும் இராணுவத்தினர் களமிறக்கப்பட்டனர்.

வான்வழித் தாக்குதல் கண்காணிப்பும்… பலியான ஒரு உயிரும்!

தரையிறக்கப்பட்டப் படைகள் ஒருபுறமிருக்க, சிறைக்குள் என்ன நடக்கிறது என்பதைத் துல்லியமாகக் கணிக்க வான்வழியாக இலங்கை விமானப் படையின் ‘பெல் 412’ (Bell 412) ஹெலிகொப்டர் மற்றும் நவீன ட்ரோன் கெமராக்கள் களமிறக்கப்பட்டன. வான்வெளியில் சீறிப்பாய்ந்த ஹெலிகொப்டர்களின் சத்தம், அப்பகுதி மக்களை மேலும் பீதியில் ஆழ்த்தியது.

இந்த வன்முறைச் சம்பவத்தின் போது பலத்த காயமடைந்த 7 கைதிகள் உடனடியாக மீட்கப்பட்டு, ராகம போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர்களில் ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளியே கூடிய உறவினர்கள்: துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தால் வெடித்த போராட்டம்!

சிறைக்குள் நிலைமை கொதித்துக்கொண்டிருக்க, செய்தி அறிந்து தங்களின் உறவுகளைப் பார்க்க ஓடோடி வந்த கைதிகளின் குடும்பத்தினர் சிறை வாசலில் திரண்டனர். பாதுகாப்பு காரணங்களால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், பொலிஸாருக்கும் உறவினர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது சிறை வளாகத்தினுள் இருந்து அடுத்தடுத்து கேட்ட துப்பாக்கிச் சூடு போன்ற பலத்த சத்தங்கள், வெளியே நின்றவர்களை நிலைகுலையச் செய்தன! அதிர்ச்சியடைந்த உறவினர்களும் பகுதி மக்களும் பொலிஸ் தடைகளை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைய முயன்றனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கைகளில் இறங்க, ஆத்திரமடைந்த சிலர் பாதுகாப்புப் படையினரை நோக்கிக் கற்களை வீசித் தாக்குதல் நடாத்தினர்.

அதிரடியாக அமுலுக்கு வந்த ஊரடங்கு: தற்போதைய நிலை என்ன?

வெளிப்புறத்தில் பதற்றம் தொற்றிக் கொண்டதைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் உடனடி முடிவொன்றை எடுத்தனர். அதன்படி, மகர பகுதியைச் சேர்ந்த:

  • 246 மேற்கு கெண்டலியத்த வீதி
  • 246C வடக்கு கெண்டலியத்த வீதி
  • 181G தம்புவ

ஆகிய 3 கிராம சேவகர் பிரிவுகளிலும் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் உடனடியாக அமுல்படுத்தப்பட்டது.

தற்போது அனைத்துக் கைதிகளும் தங்களின் சிறைக் கூடங்களுக்குள் அடைக்கப்பட்டு, வன்முறை முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

மகரையில் கொழுந்துவிட்டு எறிந்த தீ: துப்பாக்கிச் சூடு, ஹெலிகொப்டர் முற்றுகை!

மகர சிறைச்சாலையின் சுவர்களுக்குள் நேற்றைய தினம் (01 வெள்ளிக்கிழமை) கைதிகளுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் இடையே திடீரென வெடித்த வாக்குவாதம், நொடிப் பொழுதில் பெரும் கலவரமாக உருவெடுத்தது. அமைதியாக இருக்க வேண்டிய சிறை வளாகம், கூச்சல்களினாலும் கூச்சல் குழப்பங்களினாலும் அதிரத் தொடங்கியது. கைதிகள் சிலர் கட்டுப்பாட்டை மீறி வன்முறையில் இறங்கியதைத் தொடர்ந்து, சிறையின் பிரதான ஜெயிலர் அலுவலகம் மற்றும் ஒழுக்காற்றுப் பிரிவு என்பவற்றுக்குத் தீ வைக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

புகை மண்டலமும் பதற்றமும் சிறையைச் சூழ, நிலைமை முற்றாகக் கைமீறிப் போனது. இதையடுத்து, நிலமையை உடனடியாகக் கட்டுக்குள் கொண்டுவரக் காவல் துறையினர், விசேட அதிரடிப்படை (STF) மற்றும் இராணுவத்தினர் களமிறக்கப்பட்டனர்.

வான்வழித் தாக்குதல் கண்காணிப்பும்… பலியான ஒரு உயிரும்!

தரையிறக்கப்பட்டப் படைகள் ஒருபுறமிருக்க, சிறைக்குள் என்ன நடக்கிறது என்பதைத் துல்லியமாகக் கணிக்க வான்வழியாக இலங்கை விமானப் படையின் ‘பெல் 412’ (Bell 412) ஹெலிகொப்டர் மற்றும் நவீன ட்ரோன் கெமராக்கள் களமிறக்கப்பட்டன. வான்வெளியில் சீறிப்பாய்ந்த ஹெலிகொப்டர்களின் சத்தம், அப்பகுதி மக்களை மேலும் பீதியில் ஆழ்த்தியது.

இந்த வன்முறைச் சம்பவத்தின் போது பலத்த காயமடைந்த 7 கைதிகள் உடனடியாக மீட்கப்பட்டு, ராகம போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர்களில் ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளியே கூடிய உறவினர்கள்: துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தால் வெடித்த போராட்டம்!

சிறைக்குள் நிலைமை கொதித்துக்கொண்டிருக்க, செய்தி அறிந்து தங்களின் உறவுகளைப் பார்க்க ஓடோடி வந்த கைதிகளின் குடும்பத்தினர் சிறை வாசலில் திரண்டனர். பாதுகாப்பு காரணங்களால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், பொலிஸாருக்கும் உறவினர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது சிறை வளாகத்தினுள் இருந்து அடுத்தடுத்து கேட்ட துப்பாக்கிச் சூடு போன்ற பலத்த சத்தங்கள், வெளியே நின்றவர்களை நிலைகுலையச் செய்தன! அதிர்ச்சியடைந்த உறவினர்களும் பகுதி மக்களும் பொலிஸ் தடைகளை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைய முயன்றனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கைகளில் இறங்க, ஆத்திரமடைந்த சிலர் பாதுகாப்புப் படையினரை நோக்கிக் கற்களை வீசித் தாக்குதல் நடாத்தினர்.

அதிரடியாக அமுலுக்கு வந்த ஊரடங்கு: தற்போதைய நிலை என்ன?

வெளிப்புறத்தில் பதற்றம் தொற்றிக் கொண்டதைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் உடனடி முடிவொன்றை எடுத்தனர். அதன்படி, மகர பகுதியைச் சேர்ந்த:

  • 246 மேற்கு கெண்டலியத்த வீதி
  • 246C வடக்கு கெண்டலியத்த வீதி
  • 181G தம்புவ

ஆகிய 3 கிராம சேவகர் பிரிவுகளிலும் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் உடனடியாக அமுல்படுத்தப்பட்டது.

தற்போது அனைத்துக் கைதிகளும் தங்களின் சிறைக் கூடங்களுக்குள் அடைக்கப்பட்டு, வன்முறை முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular