2025 மகளிர் உலகக் கிண்ணத்தை இந்திய மகளிர் அணி கைப்பற்றியுள்ளது. 
2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிளுக்கு இடையில் மும்பையில் இடம்பெற்றது. 
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென்னாபிரிக்க மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்து. 
இதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 298 ஓட்டங்களை பெற்றது. 
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் Shafali Verma அதிகபட்சமாக 87 ஓட்டங்களையும், Deepti Sharma 58 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். 
பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் Ayabonga Khaka 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதன்படி 299 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க மகளிர் அணி 45.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 246 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது. 
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணியின் தலைவி laura wolvaardt அதிகட்பசமாக 101 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Deepti Sharma 05 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதன்படி 2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 52 ஓட்டங்களால் வெற்றிப்பெற்று முதல் முறையாக செம்பியன் பட்டம் வென்றுள்ளது.


 