Thursday, July 24, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsமட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலைகளுக்கு திடீர் விஜயம்!

மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலைகளுக்கு திடீர் விஜயம்!

வெளிநாட்டுப் பயிற்சி பெற்று இந்நாட்டிற்கு வரும் சிறப்பு மருத்துவர்கள் நாட்டில் தங்கி இருந்து பணி புரியும் நிலை தற்போது காணப்படுவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வைத்தியசாலையான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அண்மையில் விசேட கண்காணிப்பு விஜயமொன்றை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளையும் முறையான அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்து அந்த மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு தரமான மற்றும் வினைத்திறனான சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து சுகாதாரப் பிரிவு தலைவர்களுடனும் ஒரு விசேட கலந்துரையாடலொன்றை நடத்தும் பொருட்டு இந்த கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களால் மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளின் தற்போதைய நிலைமைகள் குறித்து சிறப்பு ஆய்வு மேற்கொண்ட சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர் மருத்துவமனையில் சிறப்பு ஆய்வு ஒன்றையும் மேற்கொண்டார்.

ஏறாவூர் மருத்துவமனையை அடிப்படை மருத்துவமனையாக மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்துவதாக குறித்த கண்காணிப்பு விஜயத்தின்போது அவர் தெரிவித்தார்.

ஆய்வைத் தொடர்ந்து, மருத்துவமனையில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, ஏறாவூர் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுடன் மருத்துவமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சிறப்புக் கலந்துரையாடலின் போது, மேற்கண்ட விடயங்களை அமைச்சர் தெரிவித்தார்.

இதில், வெளிநாட்டுப் பயிற்சி பெற்று இந்நாட்டிற்கு வரும் சில சிறப்பு மருத்துவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு போன்ற தொலைதூரப் பகுதிகளில் முதல் நியமனம் பெற்று மீண்டும் வெளிநாடுகளுக்குச் செல்வதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்கம் பொறுப்பேற்றபோது சுமார் 70 சதவீதமாக இருந்த நிலைமை தற்போது குறைந்து வருவதாகவும், வெளிநாடுகளுக்குச் செல்வதற்குப் பதிலாக நாட்டிலேயே தங்கி இருந்து பணி புரியும் மருத்துவர்களின் எண்ணிக்கை 60-70 சதவீதம் வரை இருப்பதாகவும், இது ஒரு நேர்மறையான விடயம் என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

சுமார் 20 வருடங்களுக்கு முன் வைத்தியராகப் பணியாற்றிய மட்டக்களப்பு வைத்தியசாலையின் கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தில் இணைந்தமை ஒரு தனித்துவமான அனுபவமாக இருந்ததாக அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular