Wednesday, February 5, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsமதுரங்குளியில் சிக்கிய ஒரு தொகை கஞ்சா!

மதுரங்குளியில் சிக்கிய ஒரு தொகை கஞ்சா!

இலங்கை கடற்படை, மதுரங்குளிய காவல்துறையினருடன் இணைந்து 2025 ஜனவரி 31 ஆம் திகதி மதுரங்குளிய, நவதங்குளம் பகுதியில் நடத்தப்பட்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, கேரள கஞ்சா ஒரு (01) கிலோகிராம் ஐநூற்று எண்பத்தைந்து (585) கிராமுடன் ஒரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதுடன், ஒரு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், மதுரங்குளிய காவல்துறையினருடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, ஒரு (01) கிலோகிராம் ஐநூற்று எண்பத்தைந்து (585) கிராம் எடையுள்ள கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது, இதன் மொத்த மதிப்பு ஆறு (06) இலட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கோட்டந்தீவு, பெரியபாடு பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும், சந்தேக நபர், கேரள கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை மதுரங்குளி காவல் நிலையத்தில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்க பட்டது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular