ஜூட் சமந்த
வீதியில் பயணித்த மோட்டார் கார் சாலையை விட்டு விலகி மரத்தில் மோதியதில் பெல்ஜியத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் சாரதி ஆகியோர் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் – சிலாபம் சாலையில் மதுரங்குளிய – செம்பெட்டே பகுதியில் நேற்று 24 ஆம் தேதி மாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் சிக்கிய மோட்டார் கார், சிலாபத்திலிருந்து புத்தளம் நோக்கிச் சென்றவேளையில் வாகனம் சாலையை விட்டு விலகி மரத்தில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேலும வாகனத்தை செலுத்திய ஓட்டுநர் தூங்கிவிட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர்களின் நிலை மோசமாக இல்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மதுரங்குளிய காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.


