உள்ளூராட்சித் தேர்தலில் வன்னியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் சத்தியப்பிரமான நிகழ்வு நேற்று மன்னாரில் இடம்பெற்றது.
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சித் தேர்தலில், வன்னி மாவட்டத்தில், மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வெவ்வேறு கட்சிகளில் போட்டியிட்டு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் நேற்று (10), கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
மன்னார் நகரில் நடைபெற்ற இந் நிகழ்வில் கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக், மன்னார் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் இஸ்மாயில் இஸ்ஸதீன்,உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பங்குபற்றிச் சிறப்பித்தனர்.
