Wednesday, June 11, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsமன்னாரில் சிக்கிய கடத்தல் பொருட்கள்!

மன்னாரில் சிக்கிய கடத்தல் பொருட்கள்!

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட அழகுசாதனப் பொருட்கள் மன்னார் வடக்கு கடற்பரப்பில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டது.

இலங்கை கடற்படையினர், 2025 ஏப்ரல் 16 ஆம் திகதி மன்னாரின் கிராஞ்சி கடல் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குல் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கடல் பகுதியில் மிதந்து கொண்டிருந்த அழகுசாதனப் பொருட்களை கடற்படையினர் கைப்பற்றினர்.

கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்கரையை உள்ளடக்கி வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான புவனேகவுடன் இணைக்கப்பட்ட விரைவு நடவடிக்கை படைப் பிரிவினால், மன்னாருக்கு வடக்கே உள்ள கிரன்சி கடல் பகுதியில் 2025 ஏப்ரல் 16 ஆம் திகதி மேற்கொண்ட இந்த சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, கடலில் மிதந்துக் கொண்டிருந்த, சந்தேகத்திற்கிடமான இரண்டு (02) பொதிகள் பரிசோதிக்கப்பட்டன.

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குல் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூவாயிரத்து இருநூறு (3200) ஷம்போ பக்கெட்டுகள், முந்நூற்று எழுபத்தாறு (376) அழகுசாதனப் பொருட்கள் மற்றும் எழுபத்தைந்து (75) அழகுசாதன சவர்க்காரங்கள் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்களை கடற்படையினர் கைப்பற்றினர்.

இந்த நடவடிக்கையின் போது கடற்படையால் கைப்பற்றப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஜெயபுரம் காவல் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular