மன்னார் பகுதியில் அமைக்கப்பட உள்ள காற்றாலைக்கு மன்னார் மக்களால் பெரும் எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையில், அதற்கு பலம் சேர்க்கும் முகமாக முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து இரண்டு இளைஞர்கள் நேற்றைய தினம் 10.09.2025 கால் நடையாக நடந்து சென்று தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இந் நிலையில் துண்டு பிரசுரங்களையும் வீதி ஓரங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;
காற்றாலை அபிவிருத்தி திட்டம் மக்களுக்கானதா? முதலாளிகளுக்கானதா? எமது வளத்தை அழித்துவிட்டு யாருக்கானது உங்கள் அபிவிருத்தி. எமது நிலங்களும், எமது வளங்களும் எமக்கானதே. முதலாளிகளின் அடிவருடிகளாக இல்லாது எம் எதிர்காலத்தையும் சிந்திப்போம். கனியமணல் சுரங்கம் மன்னார் தீவிற்கு மட்டுமல்ல முழுநாட்டிற்கும் ஆபத்தானது என அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.
