மன்னார் வலயக் கல்விப் பணிமனையின் ஏற்பாட்டில், புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு விசேட இப்தார் நிகழ்வு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. செல்வன் அவர்களின் தலைமையில் இன்று இனிதே நடைபெற்றது.
சிறப்பு அதிதியாக மன்னார் மக்கள் வங்கிக் கிளை முகாமையாளர் ஜனாப் ஹக் முஹம்மது அரூஸ் கலந்துகொண்டதுடன், இந் நிகழ்வில் வலயக் கல்விப் பணிமனையின் முக்கிய அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிமனை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் ஒரு விசேட அங்கமாக, எருக்கலம்பிட்டி மகளிர் பாடசாலை மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டன.
சமய நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்தும் நோக்கில் அமைந்த இந்த இப்தார் நிகழ்வு, கல்விச் சமூகத்தினிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.




