எதிர்கட்சிகள் இணைந்து ஆட்சி அமைப்பதை விமர்சித்த ஆளும் கட்சி எதிர்கட்சிகளை இணைத்துக்கொண்டு அதிகாரத்தை கைப்பற்றுவது நியாயமான செயலா என முஜீபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.
எதிர்க்கட்சி கூட்டணியை கீரி, பாம்பு என விமர்சித்த ஆளும் தரப்பு தற்போது விமர்சித்த அணிகளிடன் ஆட்சி அமைக்க இணைந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
ரிஷாத் பதியுதீனை சொப்பின் பேக்குடன் வந்தவர் என பிரதி அமைச்சர் ஒருவர் கடுமையாக விமர்சித்தார், தற்போது குருநாகலை மற்றும் ஹொரவபத்தானையில் அவரது கட்சி உறுப்பினர்களோடு கூட்டணி வைத்துள்ளார்கள் இதில் யார் கீரி ? யார் பாம்பு ? பிள்ளையானை தீவிரவாதி என சிறையில் அடைத்துவிட்டு அவரின் கட்சியோடு இணைந்து அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். இதில் யார் கீரி யார் பாம்பு என முஜீபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.