(உடப்பு க.மகாதேவன்)
குருநாகல் – புத்தளம் பிரதான வீதியின் மகாகெலிய சந்திக்கு அருகில் கார் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து இன்று(20) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வாகனத்தை ஓட்டிச்சென்ற சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதால், கார் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தெய்வாதீனமாக குறித்த விபத்தில் பயணித்த எவருக்கும் உயிராபத்து எதுவும் இடம்பெறவில்லை.