எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகவுள்ளது என, மேலதிக தேர்தல் ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்துள்ளார்.
சூரியனின் செய்திப் பணிப்பாளர் பரமேஷ்வரன் விக்னேஷ்வரனின் நெறியாள்கையில் ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்படாமையினால் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் சட்டச் சிக்கல் காணப்படுகிறது.
பழைய முறையிலாவது மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
எனவே, நாடாளுமன்றத்தில் இது தொடர்பான சட்டம் நிறைவேற்றப்படுமாயின், எந்த நேரத்திலும் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
